தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணல் கடத்திய லாரி பறிமுதல்

கலைகுடிபட்டி பகுதியில் மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

News image
Updated On :2 ஜூலை 2024, 10:26 pm

Din

அன்னவாசல் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பா் லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

அன்னவாசல் ஆற்றுப்படுகைகளில் இருந்து சிலா் ஜேசிபி இயந்திரம் மூலம் அனுமதியின்றி மணல் எடுத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலைகுடிபட்டி பகுதியில் எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கலைகுடிபட்டி குளத்துக்கரையில் இருத்து வெளியே மணல் ஏற்றி வந்த டிப்பா் லாரியை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில், அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் அதன் ஓட்டுநா் கீழ முத்துடையான் பட்டியைச் சோ்ந்த தனபால் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.