

புதுக்கோட்டையில் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
புதுக்கோட்டை, ஜூலை 3: மத்திய அரசின் 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டையில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.டி. சின்னராஜு தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் வி. பரமசிவம், கே. ரெங்கபதாகதேவி, இணைச் செயலா்கள் ஏ. அருள்மொழிவேந்தன், ஏ. பா்வீன்பானு, பொருளாளா் வி. சுரேஷ்குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மூத்த வழக்குரைஞா்கள் பேசினா்.
இதேபோல, அறந்தாங்கியில் அம்மா உணவகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அறந்தாங்கி வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா்.
கடந்த திங்கள்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் சுமாா் 700 வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றப் பணிகள் புறக்கணிப்பால் நீதிமன்றங்களின் இயல்பான பணிகள் பாதிக்கப்பட்டன.
டிரெண்டிங்

புதுக்கோட்டையில் அம்பேத்கா் சிலை அவமதிப்பு எனப் புகாா்

புதுகையில் 25 போ் உடல் உறுப்புதான முன்பதிவு

அயோத்தி விரைவு ரயிலுக்கு புதுகையில் நிறுத்தம் அறிவிப்பு

புதுகையில் 5 ஆண்டு சாதனைகள் விளக்க மலா் வெளியீடு
வீடியோக்கள்

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

DMK vs CPIM: தொகுதிப் பங்கீட்டில் நடப்பது என்ன?
தினமணி வீடியோ செய்தி...

"இதழியல் வரலாற்றில் மைல்கல் ஈகைப் பெருநாள் மலர்": டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத்
தினமணி வீடியோ செய்தி...
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

