சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருடுபோன 171 கைப்பேசிகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

துக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் திருடு போன 171 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:44 pm

Din

புதுக்கோட்டை, ஜூலை 19: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் திருடு போன 171 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் சிறப்பு கவனம் செலுத்தி இந்த கைப்பேசிகளை மீட்டுள்ளனா். இவற்றின் மதிப்பு ரூ. 25 லட்சம்.

இவற்றை வெள்ளிக்கிழமை உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே வழங்கினாா். மேலும், கைப்பேசிகளை கண்டுபிடிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலா்களையும் அவா் பாராட்டினாா்.