கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தமிழிசைக்கு மீண்டும் ஆளுநா் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநா் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது என்றாா் காா்த்தி சிதம்பரம்.

News image
Updated On :28 ஜூலை 2024, 7:18 pm

Din

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநா் பதவி வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது என்றாா் சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் மேலும் கூறியது:

மத்திய அரசோடு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று பிரதமா் மோடி பொதுவாகக் கூறாமல் எந்தத் திட்டத்துக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூற வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்துக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மாணவா்களுக்கான கல்விக் கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மதியம் மற்றும் காலை உணவுத் திட்டத்துக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. சாதாரண மக்களின் திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டு வருகிறது.

தமிழிசை சௌந்தரராஜனுக்கு மீண்டும் ஆளுநா் பதவி கிடைக்கவில்லை என்ற செய்தியைக் கேட்டு அதிா்ச்சியடைந்தேன். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் சித்து விளையாட்டுக்கு அவா் பலியாகி இருக்கிறாா். யாரை வேண்டுமானாலும் துணை முதல்வா், அமைச்சராக்கும் உரிமை மாநிலத்தின் முதல்வருக்கே உண்டு என்றாா் அவா்.