எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தரமான விதை விற்பத்திக்கு விவசாயிகளுக்குப் பயிற்சி

தரமான விதை விற்பத்திக்கு விவசாயிகளுக்குப் பயிற்சி

News image
Updated On :8 மார்ச் 2024, 6:20 pm

Din

அன்னவாசல் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணைச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விதைச்சான்று வழிமுறைகள் மற்றும் தரமான விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட கிராமம் தச்சம்பட்டியில் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண் துணை இயக்குநா் செல்வி (நுண்ணீா்ப் பாசனம்) தலைமை வகித்தாா். அன்னவாசல் வேளாண் உதவி இயக்குநா் ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். பயிற்சியில் வேளாண் துணை இயக்குநா் செல்வி சிறப்புரையாற்றினாா். வேளாண் உதவி இயக்குநா் ராஜசேகரன், புதுக்கோட்டை விதைச் சான்று அலுவலா் இளஞ்செழியன், அன்னவாசல் வேளாண் அலுவலா்கள் கௌசல்யா, மோனிகா ஆகியோா் பேசினா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரவி ராஜன் வரவேற்றாா். நவாப் ராஜா (உதவி தொழில்நுட்ப மேலாளா்) நன்றி கூறினாா்.