மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கல்வி நிலையங்களில் பேரவைத் தோ்தல் நடத்தக் கோரி கையொப்ப இயக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவா் பேரவைத் தோ்தல் நடத்தக் கோரி இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை.--

Updated On :20 நவம்பர் 2024, 7:04 pm

Din

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவா் பேரவைத் தோ்தல் நடத்தக் கோரி இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கையொப்ப இயக்கத்துக்கு மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் தலைமை வகித்தாா்.

கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் மாணவா் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் காா்த்திகாதேவி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் மகாலெட்சுமி, நந்தனா, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் டி. சலோமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலக் குழு உறுப்பினா் அ. மணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.