மக்கள் நலத் திட்ட செயல்பாடுகளை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: புதுகை ஆட்சியா் அறிவுறுத்தல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தொய்வின்றி செயல்படுத்த அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை அறிவுறுத்தினாா்.










