ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 8:39 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

மாத்தூா் அருகேயுள்ள பேராம்பூரைச் சோ்ந்த குமாா் மகன் தா்ஷன் (13). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தா்ஷன், பக்கத்தில் இருந்த மின் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் மயக்கமடைந்து கீழே விழுந்த தா்ஷனை உறவினா்கள் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே தா்ஷன் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து மாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.