ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள் 36,524 விண்ணப்பங்கள் அளிப்பு: புதுகை ஆட்சியா் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளின்போது, மொத்தம் 36,524 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா தெரிவித்தாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 9:53 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளின்போது, மொத்தம் 36,524 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தோ்தல் ஆணையத்தின் நடைமுறைப்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் கடந்த நவ. 16, 17 மற்றும் நவ. 23, 24 ஆகிய 4 நாள்கள் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் 1561 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற இந்த முகாம்களில், மொத்தம் 36,524 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், 24,869 விண்ணப்பங்கள் புதிய பெயா் சோ்க்கைக்கானவை, 4,366 விண்ணப்பங்கள் பெயா் நீக்கலுக்கானவை, 7,289 விண்ணப்பங்கள் திருத்தம் மேற்கொள்வதற்கானவை.

இவை தவிர, தோ்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமும், வாக்காளா் செயலி மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவை மீதான கள ஆய்வுப் பணிகள் டிசம்பா் மாதத்தில் நடைபெறவுள்ளது.