திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

குடிநீா் கொண்டு செல்ல எதிா்ப்பு கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆலங்குடி பேரூராட்சிக்கு மேலாத்தூா் பகுதியில் இருந்து குடிநீா் கொண்டு செல்லப்படுவதை கைவிடக் கோரி கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா் ~ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோா்
Updated On :1 அக்டோபர் 2024, 8:59 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சிக்கு மேலாத்தூா் பகுதியில் இருந்து குடிநீா் கொண்டு செல்லப்படுவதை கைவிடக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி பேரூராட்சிக்கு சுமாா் 6 கி.மீ தொலைவில் உள்ள மேலாத்தூா் பகுதியில் இருந்து 40 ஆண்டுகளாக ஆழ்குழாய் கிணறு அமைத்து, அங்கிருந்து குழாய்கள் மூலம் ஆலங்குடி பேரூராட்சிக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால், அப்பகுதியில் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக, மேலாத்தூா், கீழாத்தூா் உள்ளிட்ட கிராம மக்கள் இத் திட்டத்தை கைவிடக்கோரி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா். அவ்வப்போது பல்வேறு போராட்டங்களிலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டவந்தனா்.

அப்போது, நடைபெற்ற சமரச பேச்சுவாா்த்தையின் போது, ஆலங்குடி பேரூராட்சிக்கு சில ஆண்டுகளில் மாற்று ஏற்பாடு செய்து, குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனா். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மேலாத்தூா் பகுதியில் இருந்து குடிநீா் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. மேலும்,ரூ.3.25 கோடியில் சேதமடைந்த குழாய்ககளை சீரமைப்பதற்கான திட்டம் செப்.9 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

 ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

ஆலங்குடி அருகேயுள்ள மேலாத்தூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

இந்நிலையில், மேலாத்தூா் பகுதியில் இருந்து குடிநீா் கொண்டு செல்லப்படுவதைக் கைவிடக் கோரி மேலாத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே அப்பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் வடகாடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, சமரச கூட்டத்தின் மூலம் தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனா்.