புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விராலிமலை அருகே சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2024, 8:48 pm

Din

விராலிமலை அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வைரம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்லையா(57). கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலையை அடுத்துள்ள கோவில்பட்டி -மணப்பாறை சாலை மேட்டுக்கடை அருகே சென்றுக்கொண்டிருந்தாா்.

அப்போது மணப்பாறையில் இருந்து வந்த சரக்கு ஆட்டோ செல்லையா மீது மோதியது. இதில் செல்லையா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த விராலிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.