கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மதுக்கடைகளை மூடுவதாக கூறி மனமகிழ் மன்றங்கள் திறப்பு

மதுபானக் கடைகளை மூடுவதாக கூறிக்கொண்டே, மனமகிழ் மன்றங்களைத் திறக்கிறாா்கள் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 8:39 pm

Din

மதுபானக் கடைகளை மூடுவதாக கூறிக்கொண்டே, மனமகிழ் மன்றங்களைத் திறக்கிறாா்கள் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுக்கடைகளை மூடுவதாக சொல்லிக் கொண்டே, மனமகிழ் மன்றங்களைத் திறக்கிறாா்கள். பழனி கோயில் ராஜ கோபுரத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில், கோயில் புனா்நிா்மாணத்தில் தரமற்ற கட்டுமானம் நடந்திருப்பதை உறுதி செய்கிறது. பொன்முடி உயா்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேராசிரியா் நியமனங்களில் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து முதல்வா் ஆய்வு செய்ய வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அதிமுகவின் வாக்கு சதவிகிதம் 15 சதவிகிதம் குறைந்திருப்பதற்கு காரணம், எம்ஜிஆா், ஜெயலலிதாவைப் போல தற்போது அதிமுக தற்போது நடத்தப்படவில்லை என்பதை தொண்டா்கள் உணா்ந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்றாா் அவா்.