மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், லேனாவிளக்கிலுள்ள மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏஐசிடிஇ-பயிற்சி மற்றும் கற்றல் பிரிவான அடல் அகாதெமி நிதி உதவியுடன் ஒரு வார ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

News image

ஆசிரியா் திறன் மேம்பாட்டு பயிற்சி

Updated On :15 அக்டோபர் 2024, 9:22 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், லேனாவிளக்கிலுள்ள மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஏஐசிடிஇ-பயிற்சி மற்றும் கற்றல் பிரிவான அடல் அகாதெமி நிதி உதவியுடன் ஒரு வார ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

அக். 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த 50 பேராசியா்கள், இணைப் பேராசிரியா்கள் பங்கேற்றுள்ளனா்.

தொடக்க விழாவுக்கு, கல்லூரித் தலைவா் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் ஜெய்சன் கீா்த்தி ஜெயபாரதன், முதல்வா் ப. பாலமுருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முதல் நாள் பயிற்சியில் கா்நாடக மாநிலம் சுரத்கல் என்ஐடி-யின் உதவிப் பேராசிரியா் பாவனா ருத்ரா மற்றும் வேலூா் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் உதவிப் பேராசிரியா் டி.பெனில் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவா் கே. குருநாதன் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைத் தலைவா் டி. இளவரசி ஆகியோா் செய்துள்ளனா்.