நகைத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய பெண் கைது; 17 பவுன் நகைகள் பறிமுதல்
புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட நகைத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண் குற்றவாளியை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 6.95 லட்சம் மதிப்புள்ள 17 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.






