சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நகைத் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய பெண் கைது; 17 பவுன் நகைகள் பறிமுதல்

புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட நகைத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண் குற்றவாளியை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 6.95 லட்சம் மதிப்புள்ள 17 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:35 pm

Din

புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட நகைத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட பெண் குற்றவாளியை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 6.95 லட்சம் மதிப்புள்ள 17 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை நகரக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களில் நடைபெற்ற 5 நகைத் திருட்டு வழக்குகளில் குற்றவாளியைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படையினா், தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சோ்ந்த காளிதாஸ் மனைவி நாகம்மாள் (30) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 6.95 லட்சம் மதிப்புள்ள 17 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனா்.

விசாரணைக்குப் பிறகு நாகம்மாள் திருச்சி மகளிா் சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா். குற்றவாளியைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே பாராட்டினாா்.