/
சேலத்துக்குச் சென்ற தனது மகளை காணவில்லை என தந்தை விராலிமலை போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.
விராலிமலையை அடுத்துள்ள பாத்திமா நகா் குள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் ஏழுமலை(45). இவரது மகள் பிரேமா(20). இவா் சேலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு செப். 1-ஆம் தேதி புறப்பட்டாா்.
இதையடுத்து பிரேமா சேலத்துக்கு செல்லவில்லை என குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பிரேமாவின் கைப்பேசியை தொடா்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து விராலிமலை காவல் நிலையத்தில் ஏழுமலை புகாா் அளித்தாா்.
அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான பிரேமாவை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

தங்கை இறப்பில் சந்தேகம்: சகோதரா் போலீஸில் புகாா்

தம்மம்பட்டி அருகே வாக்களிக்கச் சென்ற பெண் மாயம்

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

மகள் இறப்பில் சந்தேகம்: போலீஸில் தாய் புகாா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
49 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

