அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

விஜய் கட்சியைக் கண்டு அச்சப்பட வேண்டியதில்லை -சு.திருநாவுக்கரசா்

திமுக, காங்கிரஸ் பல ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும் வரலாற்றையும் கொண்டிருப்பதால் அச்சப்பட வேண்டியதில்லை

News image
தவெக தலைவர் விஜய்- DIN
Updated On :6 செப்டம்பர் 2024, 8:49 pm

Din

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பல ஆண்டுகள் அரசியல் அனுபவத்தையும் வரலாற்றையும் கொண்டிருப்பதால், விஜய் கட்சியை கண்டு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சு. திருநாவுக்கரசா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: விஜய் கட்சியின் மாநாட்டுக்கு அரசு அனுமதி வழங்கத் தயங்குவதாகவும் திமுக அஞ்சுகிா என்றும் முன்னாள் ஆளுநா் தமிழிசை கேட்டிருக்கிறாா். திமுக மற்றும் திமுக அணியிலுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் பல ஆண்டு அரசியல் அனுபவத்தையும் வரலாற்றையும் பெற்றவை. புதிதாக வரும் ஒரு கட்சியைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

விஜய் இப்போதுதான் கட்சி தொடங்குகிறாா். மக்களிடம் செல்ல வேண்டும். செயல்பட வேண்டும். மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையுமா எனக் கேட்கிறீா்கள். கூட்டணி ஆட்சி என்பதற்கு பெரும்பான்மை எண்ணிக்கைதான் முடிவு செய்யும். இப்போது அதுபோன்ற தேவை எதுவுமில்லை.

பாலியல் குற்றங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கடுமையான தண்டனையை முடிவு செய்ய வேண்டும். அதிகபட்சமாக ஆயுள் தண்டனையை முடிவு செய்யலாம் என்றாா் திருநாவுக்கரசா்.