சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

விஜய்-சங்கீதா விவகாரத்தை அரசியல்படுத்த விரும்பவில்லை: அண்ணாமலை

நடிகரும் தவெக தலைவருமான விஜய்-சங்கீதாவின் தனிப்பட்ட விஷயத்தை அரசியல்படுத்த நான் விரும்பவில்லை என அண்ணாமலை தெரிவித்தது குறித்து...

News image
அண்ணாமலை
Updated On :28 பிப்ரவரி 2026, 6:42 am

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகரும் தவெக தலைவருமான விஜய்-சங்கீதாவின் தனிப்பட்ட விஷயத்தை அரசியல்படுத்த நான் விரும்பவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் டிசம்பர் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று அது வெளியே வந்திருக்கிறது. இது குறித்து நான் எப்போதும் சொல்வதுதான். இது விஜய், அவரது மனைவி மற்றும் நீதிமன்றத்துக்கு இடையேயான பிரச்னையாக பார்க்கிறேன்.

மேலும், இது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையாக பார்க்கிறேன். அதே நேரத்தில் விஜய்யின் அரசியல் கருத்துகளுக்கு எப்போதும் பதில் அளிப்பதற்கு தயாராக இருக்கிறேன். கணவருக்கும், மனைவிக்கும் எங்கே இருந்தாலும் மகிழ்ச்சி கிடைக்கட்டும். அதனால் அரசியல் ரீதியாக நான் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை, விரும்பவில்லை என்றார்.

விஜய் அவரது மனைவி சங்கீதா மற்றும் நீதிமன்றத்துக்கும் இடையேயான பிரச்னையை நான் அரசியல்படுத்த விரும்பவில்லை.

அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்திற்குள் ஒரு மனிதன் போய்விட்டு வெளியே வருவது போன்றது. அதுவரை தோண்டப்படாத உங்களது தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் அரசியலுக்குள் நுழைந்துவிட்ட பிறகு தோண்டுவார்கள். இது எல்லா தலைவர்களுக்குமான ஒன்றுதான். அது விஜய்க்கும் இருக்கிறது.

மேலும், விஜய் அரசியலுக்கு வரும்போது இதையெல்லாம் உணர்ந்துதான் வந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன். இதை அவர் கடந்துதான் போக வேண்டும். இதையெல்லாம் தாண்டிதான் அவருடைய அரசியல் பயணம் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து மக்கள் அவரை ஏற்றுக் கொள்வார்களா, மாட்டார்களா என்பதை வரும் பேரவைத் தேர்தல் முடிவு செய்யும்.

ஒரு திரைப்பட நடிகராக வீட்டில் நிம்மதியாக இருந்திருக்கலாம். நட்சத்திர மதிப்போடு இருந்திருக்கலாம். கையை தூக்கிக் காட்டினால் ஒரு லட்சம் பேர் ஆரவாரம் செய்யலாம். பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்டதுதான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியல் களத்திற்கு வந்த பிறகு அழுத்தத்துடன் தான் அவர்கள் வெளியே வர வேண்டும். இது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்க்கும் ஆரம்ப காலத்தில் இருந்தது. அதனால் இது வேண்டும், வேண்டாம் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

விஜய் இதனை கடந்து தான் போக வேண்டும். அதற்கான விலையையும் கொடுத்து தான் ஆக வேண்டும். இதற்கான நியாயம். தர்மத்தை தாண்டி தான் பயணம் செய்ய வேண்டும். அதனால் இதனை ஒரு தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்னையாக நான் பார்க்கிறேன். இதில் நான் இந்த நேரத்தில் ஒரு தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனத்தை வைத்து அதை அநாகரிகமாகவோ, அரசியலாக்கவோ நான் விரும்பவில்லை. எனது அரசியல் அப்படிப்பட்ட அரசியல் கிடையாது என்று அண்ணாமலை கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.