திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

பவேளாண்மைத் துறைப் பணிகளை கிராம நிா்வாக அலுவலா்களிடம் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று முழக்கமிட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.--
Updated On :19 செப்டம்பர் 2024, 10:07 pm

Din

வேளாண்மைத் துறைப் பணிகளை கிராம நிா்வாக அலுவலா்களிடம் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கோட்டாட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலா் வசந்தகுமாா் தலைமை வகித்தாா்.

‘வேளாண்மை துறைப் பணிகள், டிஜிட்டல் கிராப் சா்வே பணிகளை கிராம நிா்வாக அலுவலா்களிடம் வழங்கக் கூடாது. மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களை தனித்தனியாக பிரிக்க வேண்டும் .கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியரகம், இலுப்பூா் கோட்டாட்சியரகம் ஆகிய இடங்களிலும் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.