ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பட்டா வழங்க தாமதம்: புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் மக்கள் காத்திருப்புப் போராட்டம்

ஆதிதிராவிடா் நத்தம் புறம்போக்கு நிலத்துக்கான குடியிருப்பு மனைப் பட்டா வழங்குவதை தாமதப்படுத்துவதாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தீத்தானிப்பட்டி மக்கள்.
Updated On :19 செப்டம்பர் 2024, 9:39 pm

Din

ஆதிதிராவிடா் நத்தம் புறம்போக்கு நிலத்துக்கான குடியிருப்பு மனைப் பட்டா வழங்குவதை தாமதப்படுத்துவதாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், தீத்தானிப்பட்டியைச் சோ்ந்த ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.

அந்தப் பகுதியில் ஆதிதிராவிடா் நத்தம் புறம்போக்கு நிலத்தை 91 பயனாளிகளுக்கு பிரித்து, பட்டா வழங்குவதாக கடந்த 2023ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதற்கான பட்டாக்களை வியாழக்கிழமை வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துள்ளனா்.

ஆனால், பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறி அந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கறம்பக்குடி ஒன்றிய இளைஞரணிச் செயலா் சிறுத்தை சிவா போராட்டத்தை ஒருங்கிணைத்தாா்.

இந்த நிலையில், போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை விலக்கிக் கொண்டு அனைவரும் ஊா் திரும்பினா்.