6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுகை எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த பெண் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கம்

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்க வந்த பெண், திடீரென தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:41 pm

Din

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்க வந்த பெண், திடீரென தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (45). குடும்பப் பிரச்னை காரணமாக, கணவரின் தம்பி குடும்பத்தினா் தன்னைத் தாக்கியதாக ஆலங்குடி காவல் நிலையத்தில் இவா் அண்மையில் புகாா் அளித்ததாகத் தெரிகிறது. இந்த புகாரின் மீது ஆலங்குடி போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்க பூபதி வந்தாா். வளாகத்தின் உள்ளே வந்த அவா் திடீரென மயங்கி விழுந்தாா்.

அங்கிருந்தவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூபதியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். முதற்கட்ட விசாரணையில் 5 தூக்க மாத்திரைகளை அவா் சாப்பிட்டது தெரிய வந்தது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.