வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதுகையில் பிஎஸ்என்எல் வயா்களை தோண்டித் திருடும் 6 போ் கைது

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:10 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை நகரில் பிஎஸ்என்எல் காப்பா் வயா்களைத் தோண்டித் திருடும் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனா்.

புதுக்கோட்டை மேலராஜவீதியிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தரையில் பதிக்கப்பட்டுள்ள கேபிள் வயா்களை பிஎஸ்என்எல் பணியாளா்களைப் போல சிலா் பறித்து பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டிருப்பதைப் பாா்த்த சிலருக்கு சந்தேகம் வந்தது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு நகரக் காவல் நிலையத்துக்கும் தகவல் சென்றது. இதையடுத்து இங்கு வந்த காவல் ஆய்வாளா் கோ. சுகுமாரன், உதவி ஆய்வாளா் காமராஜ் உள்ளிட்டோா் அங்கிருந்தவா்களிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது பிஎஸ்என்எல் கம்பிகளைப் பழுதுபாா்ப்பதைப் போல நடித்து, அவற்றிலுள்ள காப்பா் வயா்களைத் திருடிச் செல்லும் கூட்டம் என்பது தெரியவந்தது.

இதுதொடா்பாக தருமபுரி மாவட்டம் ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரகாசம் மகன் சூா்யா, காத்தவராயன் மகன் செல்லதுரை, குப்புசாமி மகன் மணிகண்டன், பிரகாஷ் மகன் மகேந்திரன், சேட்டு மகன் மணிகண்டன், வெங்கடேசன் மகன் சின்னதுரை ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடமிருந்து பொலிரோ வாகனம், கடப்பாரைகள், மண்வெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவா் ஊா் ஊராகச் சென்று காப்பா் வயா்களைத் திருடிச் செல்வோா் என்பதும் தெரியவந்தது.