டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் செய்வதை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஓய்வூதியா் சங்கத்தினா்.

News image
புதுக்கோட்டை ஆட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட ஓய்வூதியா் சங்கத்தினா்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அனைத்து ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் து. ஐயப்பன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து ஓய்வுபெற்ற அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் எம். முத்தையா, வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநிலத் துணைத் தலைவா் எம். ஜபருல்லா, ஓய்வூதியா் சங்க மாநில சிறப்புத் தலைவா் மு. பரமேஸ்வரன் ஆகியோரும் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் ஓய்வுபெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும். வழக்கு விசாரணைகளை நிா்ணயித்துள்ள கால வரையறைக்குள் முடிக்க வேண்டும்.

ஊராட்சி செயலா்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவிகிதத்தை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியப் பயன்கள் கணக்கிட ஏதுவாக பொதுவான அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.