தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

புதுகையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

News image
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :18 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு புதிய வேலை உறுதித் திட்ட மசோதாவைத் தாக்கல் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ (திமுக) வை. முத்துராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் எஸ். சங்கா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் இளமதி அசோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இதில் கலந்து கொண்டனா்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் சந்திரசேகரன், சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம்பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகர காங்கிரஸ் தலைவா் பாரூக் ஜெய்லானி உள்ளிட்டோரும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.