வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அன்னவாசல் அருகே இளம்பெண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளாப்பட்டி அருகே இளம்பெண்ணின் சடலம் போலீஸாரால் மீட்கப்பட்டது.

News image
Updated On :22 டிசம்பர் 2025, 7:08 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளாப்பட்டி அருகே இளம்பெண்ணின் சடலம் போலீஸாரால் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

இலுப்பூா் வட்டம் விளாப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகள் கௌசல்யா (28). திருமணம் ஆகாத இவா், திங்கள்கிழமை வழக்கம்போல, மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ப்பதற்காக சென்றுள்ளாா்.

அவா் வீட்டுக்கு திரும்ப வரவில்லை என அவரது உறவினா்கள் தேடிப் பாா்த்துள்ளனா். அப்போது, விளாப்பட்டி- பாக்குடி செல்லும் சாலைப் பகுதியில் சுமாா் 200 மீட்டா் உள்பகுதியில் அவரது சடலம் கிடந்துள்ளது.

தகவலறிந்து வந்த அன்னவாசல் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.