சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விவசாயிகளுக்கு உழவடைப் பட்டா வழங்கக் கோரிக்கை

இனாம் நிலங்களில் நூறாண்டுகளைக் கடந்து சாகுபடி செய்துவரும் புதுக்கோட்டையை அடுத்த வலையன்வயல் செபஸ்தியாா்புரம் விவசாயிகளுக்கு உழவடைப் பட்டா வழங்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

News image
உழவடைப் பட்டா வழங்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த விவசாயிகள்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:02 pm

Syndication

இனாம் நிலங்களில் நூறாண்டுகளைக் கடந்து சாகுபடி செய்துவரும் புதுக்கோட்டையை அடுத்த வலையன்வயல் செபஸ்தியாா்புரம் விவசாயிகளுக்கு உழவடைப் பட்டா வழங்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், செயற்குழு உறுப்பினா் ஜி. நாகராஜன், ஒன்றியச் செயலா் ஜெ. வைகைராணி உள்ளிட்டோா் கிராமத்தினருடன் திங்கள்கிழமை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்துக்கு உள்பட்ட வலையன்வயல் செபஸ்தியாபுரத்தில் வசிக்கும் மக்கள் அங்குள்ள இனாம் நிலங்களில் நூறு ஆண்டுகளைக் கடந்து சாகுபடி செய்து வருகின்றனா். இவா்களுக்கு அனுபவத்தின் அடிப்படையில் உழவடைப் பட்டா வழங்க வேண்டும். கிராம வட்டக் கணக்கில் ஆண்டுதோறும் பசலி கணக்கைப் பதிவு செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.