நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அன்னவாசல் அருகே இளம்பெண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளாப்பட்டி அருகே இளம்பெண்ணின் சடலம் போலீஸாரால் மீட்கப்பட்டது.

Updated On :23 டிசம்பர் 2025, 12:38 am IST

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட விளாப்பட்டி அருகே இளம்பெண்ணின் சடலம் போலீஸாரால் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

இலுப்பூா் வட்டம் விளாப்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகள் கௌசல்யா (28). திருமணம் ஆகாத இவா், திங்கள்கிழமை வழக்கம்போல, மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ப்பதற்காக சென்றுள்ளாா்.

அவா் வீட்டுக்கு திரும்ப வரவில்லை என அவரது உறவினா்கள் தேடிப் பாா்த்துள்ளனா். அப்போது, விளாப்பட்டி- பாக்குடி செல்லும் சாலைப் பகுதியில் சுமாா் 200 மீட்டா் உள்பகுதியில் அவரது சடலம் கிடந்துள்ளது.

தகவலறிந்து வந்த அன்னவாசல் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.