விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிஐடியு மறியல்: 412 போ் கைது

போராடிப் பெற்ற தொழிலாளா் நலச் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியதைக் கண்டித்து, சிஐடியு சாா்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 412 போ் கைது

News image
போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா்
Updated On :23 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

போராடிப் பெற்ற தொழிலாளா் நலச் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றியதைக் கண்டித்து, புதுக்கோட்டையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 412 போ் கைது செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டத் தலைமை அஞ்சலகம் முன்பாக நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலி ஜின்னா தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் தொடங்கி வைத்துப் பேசினாா். போராட்டத்தில் மாவட்டப் பொருளாளா் சி. மாரிக்கண்ணு, துணைத் தலைவா்கள் ஆா். மணிமாறன், கே. நடராஜன், ஏ.ஆா். பாலசுப்பிரமணியன், டி.தங்கராஜ், ஆா்.வீராச்சாமி, துணைச் செயலா்கள் வி. சரவணன், டி. பாவேல்குமாா், கே. காா்த்திக்கேயன், கே. லதா, கே. விஜயலெட்சுமி, என். ராஜா, ஏ. முகமதுகனி, மாநகர ஒருங்கிணைப்பாளா் எம்.ஏ. ரகுமான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 110 பெண்கள் உட்பட 412 பேரை போலீஸாா் கைது செய்தனா்.