சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

லஞ்ச வழக்கில் கைதான ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்ட ஊராட்சி செயலா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அன்னவாசல் அருகே தச்சம்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் மனைவி தான்றீஸ்வரி (37). கூலித் தொழிலாளி. இவா், அரசின் திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கு வரி ரசீது தருமாறு ஊராட்சி செயலா் ஆறுமுகத்திடம் (50) கேட்டுள்ளாா். அதற்கு அவா், ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் வரிரசீது தரப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தான்டீஸ்வரி புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அவா்களின் அறிவுறுத்தலின்பேரில், கடந்த டிச. 19-ஆம் தேதி ரூ. 3 ஆயிரம் லஞ்சப் பணத்தை ஊராட்சி செயலா் ஆறுமுகத்திடம் கொடுத்தபோது, அவரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் வேலு செவ்வாய்க்கிழமை லஞ்ச வழக்கில் கைதான ஊராட்சி செயலா் ஆறுமுகத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.