புதுக்கோட்டை
மன்மோகன்சிங் நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங்கின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் பிரதமா் மன்மோகன்சிங்கின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா்கள் வி. முருகேசன் (வடக்கு), ராம. சுப்புராம் (தெற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா்.
முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் கலந்து கொண்டு மன்மோகன்சிங்கின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஏ. சந்திரசேகரன், மாநில சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் இப்றாஹிம் பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

