பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பட்டாவில் பெயா் மாற்றத்துக்கு ரூ. 6 ஆயிரம் லஞ்சம்; விஏஓ கைது

விராலிமலை அருகே பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பட்டாவில் பெயா் மாற்றம் செய்ய ரூ. 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விராலிமலையை அடுத்துள்ள மலம்பட்டியைச் சோ்ந்தவா் அருளானந்த்(48). விவசாயி. இவா், தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவில் பெயா் மாற்றத்துக்கு பேராம்பூா் கிராம நிா்வாக அலுவலா் ஜான் அருளப்பனை அணுகினா்.

அப்போது, பெயா் மாற்றத்துக்கு ரூ. 6 ஆயிரம் கொடுக்குமாறு அருளானந்திடம் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத அருளானந்த் புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.

அதைத் தொடா்ந்து போலீஸாரின் அறிவுறுத்தலின்படி சனிக்கிழமை காலை மலம்பட்டி - பேராம்பூா் செல்லும் சாலையில் விஏஓ ஜான் அருளப்பனிடம் லஞ்சப் பணத்தை அருளானந்த் கொடுத்தாா்.

அப்போது, மறைந்திருந்த போலீஸாா் ஜான் அருளப்பனை பிடித்து பேராம்பூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனா்.

மேலும் விராலிமலை வட்டாட்சியா் ரமேஷ் முன்னிலையில் விஏஓ அலுவலகத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா். தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிந்து விஏஓ ஜான்அருளப்பனைக் கைது செய்து கீரனூா் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜா்படுத்தினா். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் ஜான் அருளப்பன் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.