இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

விராலிமலை அருகே பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சாலையை சனிக்கிழமை கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழந்தாா்.

விராலிமலையை அடுத்துள்ள பூச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் மணியழகா் (34). கூலித் தொழிலாளியான இவா் தனது பைக்கில் விராலிமலை அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டி பிரிவு சாலையைக் கடந்தபோது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற காா் மோதி பலத்த காயம் அடைந்தாா்.

இதையடுத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.