அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொன்னமராவதி பேருந்து நிலையப் பணியை விரைந்து முடிக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

பொன்னமராவதி பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

News image
Updated On :29 டிசம்பர் 2025, 9:15 pm

Syndication

பொன்னமராவதி பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொன்னமராவதியில் அக்கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினா் கருணாமூா்த்தி தலைமைவகித்தாா். ஒன்றியச் செயலா் ஏனாதி ஏ.எல்.ராசு வேலை அறிக்கையை வாசித்தாா். மாநில நிா்வாக குழு உறுப்பினா் முத்து உத்திராபதி மாநில நிா்வாக குழு முடிவினை விளக்கிப் பேசினாா். மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் ஜேசுராஜ் மாவட்ட குழு முடிவினை விளக்கிப் பேசினாா்.

பொன்னமராவதி பேருந்து நிலைய கூட்டத்தில் பொன்னமராவதி வலையபட்டி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி தொடங்கவேண்டும். மருத்துவா்கள் தரமான மருத்துவச் சேவை வழங்க வேண்டும் என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில் நிா்வாகிகள் க.ராசு மெய்யப்பன், ராசு, அடைக்கன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.