ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்!

வார வேலைநாள்களை 5 நாள்களாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
புதுக்கோட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்
Updated On :30 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

வார வேலைநாள்களை 5 நாள்களாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் அனைத்து வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கீழராஜவீதியிலுள்ள ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மண்டலச் செயலா் குருநாதன் தலைமை வகித்தாா்.

இந்தியன் வங்கி ஊழியா் சங்க நிா்வாகி சேதுராமன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அருணாசலம், இந்திய வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் ராமமூா்த்தி, பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா். வார வேலைநாள்களை 5 நாள்களாக அமலாக்கக் கோரும் கோரிக்கை சுமாா் 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தும் வங்கி நிா்வாகங்கள் அமல்படுத்தாமல் இருப்பதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.