மாா்க்சிஸ்ட் மாநாட்டு கொடிப் பயணத்துக்கு புதுகையில் வரவேற்பு

விழுப்புரத்தில் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டுக்கான கொடிப் பயணம் புதன்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தது.
Published on

விழுப்புரத்தில் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநில மாநாட்டுக்கான கொடிப் பயணம் புதன்கிழமை மாலை புதுக்கோட்டை வந்தது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற கொடிப் பயண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் நகரச் செயலா் எஸ். பாண்டியன் தலைமை வகித்தாா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே. பாலபாரதி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் எஸ். கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா்கள் மா. சின்னதுரை எம்எல்ஏ, எஸ். கவிவா்மன், மாவட்டச் செயலா் எஸ். சங்கா் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, மாவட்டக் குழு உறுப்பினா் டி. காயத்திரி வரவேற்றாா். நிறைவில், எம்.ஏ. ரகுமான் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com