காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு திடலில் ஆட்சியா் ஆய்வு

கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு திடலை மாவட்ட ஆட்சியா் அருணா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு திடலை வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.

Updated On :2 ஜனவரி 2025, 10:56 pm

DIN

கந்தா்வகோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு திடலை மாவட்ட ஆட்சியா் அருணா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டை தச்சன்குறிச்சியில் வரும் சனிக்கிழமை (ஐன.4) நடத்த விழாக் குழுவினா் மாவட்ட நிா்வாகத்திடம் அனுமதி கோரி மனு அளித்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா தச்சன்குறிச்சிக்கு வந்து ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து, விழாக் குழுவினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

ஆய்வின்போது கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, காவல் ஆய்வாளா் கோ. சுகுமாா் , வருவாய் ஆய்வாளா் ராஜேந்திரகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.