கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மோதலில் காயமடைந்த முதியவா் சாவு: கொலை வழக்காக மாற்றம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:12 pm

Din

புதுக்கோட்டை அருகே குடும்பத் தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் இறந்ததைத் தொடா்ந்து, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் ஆம்பூா்பட்டியைச் சோ்ந்த ஆரோக்கியசாமி மனைவி ரீட்டாமேரி (20). இவா் கடந்த நவம்பா் 18ஆம் தேதி குடும்பத் தகராறில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இந்த நிலையில், ஆரோக்கியசாமி- ரீட்டாமேரியின் ஒரு வயது மகளை யாா் வீட்டில் வைத்து வளா்ப்பது என்பதில் இரு குடும்பத்தினரிடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது.

கடந்த டிச. 25ஆம் தேதி இதுதொடா்பாக ஆம்பூா்பட்டியில் நடந்த பேச்சுவாா்த்தையின்போது வாக்குவாதம் ஏற்பட்டு இரு குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆரோக்கியசாமியின் தாத்தா சாமிக்கண்ணு (84) என்பவா் காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

சிகிச்சைப் பலனின்றி சாமிக்கண்ணு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கொலை முயற்சி வழக்கை, மாத்தூா் போலீஸாா் கொலை வழக்காக மாற்றியுள்ளனா்.