எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

புதுகையில் வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
புதுக்கோட்டை வட்டாட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 9:39 pm

Din

பணியின்போது இறக்கும் வருவாய் கிராம ஊழியா்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை வட்டாட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் வட்டத் தலைவா் மொக்கையன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. செல்லையா, வட்டச் செயலா் லட்சுமி, பொருளாளா் உருமையா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

பணியின்போது இறந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள கிராம ஊழியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.