மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

புதுகையில் வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
புதுக்கோட்டை வட்டாட்சியரகம் முன் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 9:39 pm

Din

பணியின்போது இறக்கும் வருவாய் கிராம ஊழியா்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை வட்டாட்சியரகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் வட்டத் தலைவா் மொக்கையன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. செல்லையா, வட்டச் செயலா் லட்சுமி, பொருளாளா் உருமையா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்.

பணியின்போது இறந்த ஊழியா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள கிராம ஊழியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.