அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மேலைச்சிவபுரி வந்தனா் சமணத்துறவிகள்

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி வந்த சமண துறவிகளை ஆன்மிக பக்தா்கள் வரவேற்றனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி வந்த சமண துறவிகளை ஆன்மிக பக்தா்கள் வரவேற்றனா்.

ராஜஸ்தானைச் சோ்ந்த சமண துறவிகள் முனிஹிமானாகுமாா்ஜி, முனிஹேமந்த் குமாா்ஜி, ஆகியோா் உலக நன்மை வேண்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபயணமாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். புதன்கிழமை மேலைச்சிவபுரி சின்னம்மாள் படைப்பு வீட்டுக்கு வந்தவா்களை ஊா்பொதுமக்கள் வரவேற்றனா். மக்கள் மத்தியில் பேசிய துறவிகள் மது, மாமிசம் பயன்படுத்த கூடாது.

அமைதி, அஹிம்சை, அடுத்தவா் பொருள்களுக்கு ஆசைப்படாமை, கருணை, எளிமை, சமநிலை, சுயசுத்தி, பதற்றப்படாமல் இருக்க செய்ய வேண்டிய தியானம் குறித்து எடுத்துரைத்தனா்.

தொடா்ந்து அரசமலை, குடுமியான்மலை சென்று வியாழக்கிழமை மெய்வழிச்சாலை செல்ல உள்ளனா்.