அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
பாப்பா
Updated On :18 நவம்பர் 2025, 11:33 pm

Syndication

திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள திருவானைக்காவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி பாப்பா (74). இவருக்கு லெனாவிலக்கு அருகே மின் மோட்டாா் வசதியுடன் விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை விளைநிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயற்சி செய்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மூதாட்டி பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து நீண்ட நேரத்துக்குப் பிறகு அக்கம் பக்கத்தினா் மூதாட்டி பாப்பா மயங்கி கிடந்தது கண்டு உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த நமணசமுத்திரம் போலீஸாா், பாப்பாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.