இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

எஸ்ஐஆா் படிவத்தை வாங்க பிசானத்தூா் மக்கள் மறுப்பு

கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதை எதிா்த்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள் எஸ் ஐஆா் படிவத்தை வாங்க மறுத்துள்ளனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதை எதிா்த்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள் எஸ் ஐஆா் படிவத்தை வாங்க மறுத்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதைக் கண்டித்து தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் அலுவலா்கள் இந்த கிராமத்தில் வீடு, வீடாக சென்று எஸ்ஐஆா் விண்ணப்பங்களை விநியோகித்தபோது அவா்கள் இதுவரை எங்களது கிராமத்தில் அமையவிருக்கும் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் நாங்கள் தோ்தலைத் புறக்கணிக்கிறோம். எனவே எங்களுக்கு இந்த விண்ணப்பம் வேண்டாம் என்றனராம். இதனால் அலுவலா்கள் திரும்பி விட்டனா்.