மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பிசானத்தூா் தொடா் போராட்டத்துக்கு திருச்சி எம்.பி துரை வைகோ ஆதரவு!

கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை. வைகோ கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினாா்.

News image
போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசிய திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ
Updated On :22 நவம்பர் 2025, 10:59 pm

Syndication

கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தில் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை. வைகோ கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதைக் கண்டித்து கிராம மக்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை போராட்டத்தில் கலந்து கொண்ட திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, அப்பகுதியினரிடம் இந்த ஆலை அமைப்பதற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து மாவட்ட ஆட்சியரிடமும் அதைத்தொடா்ந்து சென்னையில் முதல்வா் மு. க. ஸ்டாலினை சந்தித்துப் பேசுவதாகவும் தெரிவித்தாா்.

மேலும் அப்பகுதி கிராமப் பொதுமக்கள் எஸ்.ஐ. ஆா் படிவம் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்த அவா், அவா்களிடம் எஸ்ஐஆா் கணக்கெடுப்புப் படிவங்களை உடனே நிரப்பிக் கொடுங்கள் என்றாா்.