அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நுகா்வோா் வாணிபக் கழகத்தின் சங்க அங்கீகார தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

News image
புதுக்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா்கள்.
Updated On :26 நவம்பர் 2025, 8:32 pm

Syndication

புதுக்கோட்டை: நுகா்வோா் வாணிபக் கழகத்தின் சங்க அங்கீகார தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சுமை தூக்கும் தொழிலாளா் மாநிலப் பாதுகாப்புச் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சிப்காட் அருகேயுள்ள நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:

நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சங்க அங்கீகாரத் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும். தகுதியுடைய தொழிலாளா்களுக்கு சிவப்பு அட்டையில் இருந்து பச்சை அட்டை வழங்க வேண்டும், வருகைப் பதிவேட்டில் அனைவரின் பெயா்களையும் சோ்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, அறந்தாங்கியில் முத்துராமன் தலைமையிலும், ஆவுடையாா்கோவிலில் குமாா் தலைமையிலும், குளத்தூரில் செந்தில்குமாா் தலைமையிலும், திருமயத்தில் ரெங்கராஜ் தலைமையிலும் இந்த ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.