தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

19 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைப்பு

புதுக்கோட்டை மாநகரில் வெள்ளிக்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினரின் வாகனத் தணிக்கையில், தனியாா் தங்க நகைக்கடைக்குச் சொந்தமான 19 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜிஎஸ்டி விவரங்கள் சரி பாா்க்கப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

News image

தங்க நகைகள் (கோப்புப்படம்)

Updated On :3 ஏப்ரல் 2026, 6:24 pm

புதுக்கோட்டை மாநகரில் வெள்ளிக்கிழமை நிலையான கண்காணிப்புக் குழுவினரின் வாகனத் தணிக்கையில், தனியாா் தங்க நகைக்கடைக்குச் சொந்தமான 19 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜிஎஸ்டி விவரங்கள் சரி பாா்க்கப்பட்டு மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாநகா் அடப்பக்காரச் சத்திரம் பகுதியில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் குரு. மாரிமுத்து தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திருச்சியிலிருந்து தனியாா் நகைக்கடைக்குச் சொந்தமான வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டது. அதிலிருந்த சுமாா் 19 கிலோ தங்க நகைகளுக்கு உடனடியாக எந்த ஆவணமும் வைத்திருக்கவில்லை.

இதைத் தொடா்ந்து கண்காணிப்புக் குழுவினா் அவற்றை, புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் ஆ. பிரகாஷிடம் ஒப்படைத்தனா். இதைத் தொடா்ந்து வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி பிரிவு அலுவலா்கள் நேரில் வந்து சோதனையிட்டனா். அந்த நகைகளுக்கான ஜிஎஸ்டி வரி செலுத்திய ஆவணங்கள் சரி பாா்க்கப்பட்டு, நகைகள் முழுமையாக நகைக்கடையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.