ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

புதுச்சேரியில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: தோ்தல் பறக்கும்படை அதிரடி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படையினா் நடத்திய தீவிர வாகன சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினரால் புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்.

Updated On :26 மார்ச் 2026, 10:32 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, பறக்கும் படையினா் நடத்திய தீவிர வாகன சோதனையில் ரூ.5 கோடி மதிப்புள்ள 3 கிலோ எடையுள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நகைகள் ராஜ்பவன் தொகுதியில் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டதாக புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் தெரிவித்தாா். மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சாா்பில் நடைபெற்ற செய்தியாளா்களுக்கான பயிலரங்கின் போது வியாழக்கிழமை இதைத் தெரிவித்தாா்.

பின்னா் இது தொடா்பான கேள்விக்குப் பதிலளித்த புதுச்சேரி தலைமைத் தோ்தல் அதிகாரி பி. ஜவஹா், பறிமுதல் செய்யப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினாா்.