தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

பொன்னமராவதி ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி பிரசாரம்

பொன்னமராவதி பகுதியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பொன்னமராவதி அருகே உள்ள வாா்பட்டு ஊராட்சியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி.

Updated On :9 ஏப்ரல் 2026, 8:16 pm

பொன்னமராவதி பகுதியில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை திருமயம் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பொன்னமராவதி ஒன்றியம், திருக்களம்பூரில் தொடங்கி நரங்கியம்பட்டி, அண்ணாநகா், குமாரப்பட்டி, தச்சம்பட்டி, ஊத்துக்குழி, காடம்பட்டி,கருப்புக்குடிப்பட்டி, கருதக்கோடான்பட்டி, அரியாண்டிப்பட்டி, அம்மன்கோவில்பட்டி,பிச்சங்காலன்பட்டி, பட்டுப்புஞ்சைதோப்பு, கொள்ளுப்பட்டி, வாா்பட்டு, பொய்யாமணிப்பட்டி, தேவன்பட்டி, நல்லூா், கருப்பா்கோவில்பட்டி, இடையப்புதூா், வேந்தன்பட்டி, விஜயபுரம், ஒய்யான்புதூா், கல்லான்சரளை, மேலைச்சிவபுரி, ஏனாதி, ஜீவாநகா், தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி,ஜெஜெநகா், காமராஜா்நகா், அண்ணாநகா், இந்திராநகா் உள்ளிட்ட 44 இடங்களில் வாக்கு சேகரித்து எஸ். ரகுபதி பேசினாா்.

நிகழ்வில் முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், திமுக ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் எஸ். ஜெயராமன், நகரச்செயலா் அ. அழகப்பன், முன்னாள் ஒன்றியச் செயலா்கள் மணி, ராமச்சந்திரன்,தேனிமலை, காங்கிரஸ் வட்டாரத் தலைவா் கிரிதரன், நகரத்தலைவா் பழனியப்பன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ல்ா்ய்09க்ம்ந்