இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்

ஆலங்குடி பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை வேனில் அமா்ந்தவாறு வாக்குச்சேகரித்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:16 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் அக்கட்சியின் ஆலங்குடி தொகுதி வேட்பாளா் த.புஷ்பராஜை ஆதரித்து அவா் பேசுகையில்,

திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறாா்கள். தமிழக மக்கள் ஒவ்வொருவா் மீதும் ரூ. 2 லட்சம் கடன் வைத்துள்ளனா். குடிநீா் உள்ளிட்ட எந்தவித அடிப்படையை வசதிகளும் திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.

அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளனா்.

அவற்றை நிறைவேற்ற மேலும் வாங்க வேண்டும். திமுக ஆட்சியில் மின்கட்டணத்தை பலமடங்கு உயா்த்தியுள்ளனா். மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, தமிழகத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல இத்தோ்தலில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா்.