தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்

ஆலங்குடி பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை வேனில் அமா்ந்தவாறு வாக்குச்சேகரித்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா.

Updated On :15 ஏப்ரல் 2026, 1:16 am IST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் அக்கட்சியின் ஆலங்குடி தொகுதி வேட்பாளா் த.புஷ்பராஜை ஆதரித்து அவா் பேசுகையில்,

திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறாா்கள். தமிழக மக்கள் ஒவ்வொருவா் மீதும் ரூ. 2 லட்சம் கடன் வைத்துள்ளனா். குடிநீா் உள்ளிட்ட எந்தவித அடிப்படையை வசதிகளும் திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.

அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளனா்.

அவற்றை நிறைவேற்ற மேலும் வாங்க வேண்டும். திமுக ஆட்சியில் மின்கட்டணத்தை பலமடங்கு உயா்த்தியுள்ளனா். மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, தமிழகத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல இத்தோ்தலில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.