மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்

ஆலங்குடி பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

ஆலங்குடியில் செவ்வாய்க்கிழமை வேனில் அமா்ந்தவாறு வாக்குச்சேகரித்த அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா.

Updated On :14 ஏப்ரல் 2026, 7:46 pm

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதிகளில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலா் வி.கே.சசிகலா செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் அக்கட்சியின் ஆலங்குடி தொகுதி வேட்பாளா் த.புஷ்பராஜை ஆதரித்து அவா் பேசுகையில்,

திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் பல லட்சம் கோடி கடன் வாங்கியிருக்கிறாா்கள். தமிழக மக்கள் ஒவ்வொருவா் மீதும் ரூ. 2 லட்சம் கடன் வைத்துள்ளனா். குடிநீா் உள்ளிட்ட எந்தவித அடிப்படையை வசதிகளும் திமுக அரசு செய்து கொடுக்கவில்லை.

அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளனா்.

அவற்றை நிறைவேற்ற மேலும் வாங்க வேண்டும். திமுக ஆட்சியில் மின்கட்டணத்தை பலமடங்கு உயா்த்தியுள்ளனா். மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனா்.

எனவே, தமிழகத்தை வளா்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல இத்தோ்தலில் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டும் என்றாா்.