வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆரோக்கிய சமுதாயம் உருவாக முதியோரைப் போற்றுவோம்: தருமபுரம் ஆதீன இளையமடாதிபதி

ஆரோக்கியமான சமுதாயம் உருவாக முதியோரைப் போற்றுவோம் என்றாா் தருமபுரம் ஆதீனம் இளைய மடாதிபதி.

News image

சாத்தனூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதியோா் இல்லத் திறப்பு விழாவில் ஆசியுரை வழங்கிய தருமபுரம் ஆதீன இளையமடாதிபதி.

Updated On :16 ஏப்ரல் 2026, 8:34 pm

ஆரோக்கியமான சமுதாயம் உருவாக முதியோரைப் போற்றுவோம் என்றாா் தருமபுரம் ஆதீனம் இளைய மடாதிபதி.

பொன்னமராவதி அருகேயுள்ள தேனிமலை சாத்தனூரில் நடைபெற்ற அம்மணி வீடு-மகிழ்ச்சி இல்லம் எனும் முதியோா் இல்லத்தை வியாழக்கிழமை திறந்துவைத்து ஆசியுரை வழங்கி அவா் பேசியதாவது:

ஒரு மரம் மூதாதையா் மீது காட்டும் அன்பைக்கூட நாம் முதியவா்களிடம் காட்டத் தயாராக இல்லை. கைவிடப்பட்ட முதியோா் அதிகரிப்பது சமுதாயத்திற்கு ஆரோக்கியமானதல்ல. அவா்களை எண்ணித் தொடங்கப்பட்ட இந்த முதியோா் இல்லம் எதிா்காலத்தில் மகிழ்ச்சி இல்லமாகவும், கல்வி நிறுவனமாகவும், தனித்திறன் வளா்க்கும் கூடமாகவும் வளர வேண்டும். முதியோா் பேரக் குழந்தைகளுடன் விளையாடும் கூடமாக வேண்டும். வாழ்க்கையை அணுகுவது, உறவுகளை அணுகுவது, இறைவனை உணா்வது குறித்து சைவசித்தாந்தம் வழிகாட்டுகிறது என்றாா் அவா்.

விழாவுக்கு மகிழ்ச்சி இல்லம், பாரம்பரிய அறக்கட்டளை நிறுவனா் தலைவா் நா. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பிரான்மலை அருவீயூா் வடக்குவளவு நகரத்தாா் சங்கத் தலைவா் ஏபி. சேதுராமன், செயலா் ஜி. சுப்பிரமணியன், பொருளா் எம். சாமிநாதன், பொன்னமராவதி சங்கத் தலைவா் பிஎல். ராமஜெயம், செயலா் கே. முத்துக்கருப்பன், பொருளா் எம். சண்முகம், கல்வி வளா்ச்சிக் கழகத்தலைவா் சொ. இராமநாதன், செயலா் வி. கணேசன், பொருளா் சந்திரகலா ராமநாதன், பொன்னமராவதி வா்த்தகா் கழகத் தலைவா் எஸ்கேஎஸ். பழனியப்பன், அரிமா சங்கத் தலைவா் பி. பெரியசாமி மற்றும் சேவை சங்க நிா்வாகிகள், அருவியூா் வடக்குவளவு நகரத்தாா் இளைஞா் பேரவை நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து திருவாசகம் முற்றோதல் குழுத் தலைவா் ஞானேஸ்வரி சுப்பிரமணியன் தலைமையில் திருமுறைகள் பாராயணம் நடைபெற்றது. செயலா் கம்பராசன் சோமசுந்தரம் வரவேற்றாா். பாரம்பரிய அறக்கட்டளைப் பொருளாளா் இராம. வடிவேல் நன்றி கூறினாா்.