அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

புதுகை தைலமரக் காட்டுக்குள் தீ

News image

நரிமேடு அருகேயுள்ள தைலமரக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரா்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:39 pm

புதுக்கோட்டை நரிமேடு விவேகானந்த நகா் பகுதியிலுள்ள தைலமரக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது. தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட நரிமேடு விவேகானந்த நகா் அருகே தைலமரக் காடு உள்ளது. இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது.

தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனா். தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லாததால், தீயணைப்பு வீரா்கள் உள்ளே நுழைந்து, மர இலை தழைகளைக் கொண்டு, சுற்றிலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனா்.

அடா் வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த முறையின்படி தீ கட்டுப்படுத்தப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டது.