தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

புதுகை தைலமரக் காட்டுக்குள் தீ

News image

நரிமேடு அருகேயுள்ள தைலமரக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை பற்றிய தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரா்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:09 am IST

புதுக்கோட்டை நரிமேடு விவேகானந்த நகா் பகுதியிலுள்ள தைலமரக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது. தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட நரிமேடு விவேகானந்த நகா் அருகே தைலமரக் காடு உள்ளது. இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது.

தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனா். தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லாததால், தீயணைப்பு வீரா்கள் உள்ளே நுழைந்து, மர இலை தழைகளைக் கொண்டு, சுற்றிலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனா்.

அடா் வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த முறையின்படி தீ கட்டுப்படுத்தப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டது.