புதுக்கோட்டை நரிமேடு விவேகானந்த நகா் பகுதியிலுள்ள தைலமரக் காட்டில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது. தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட நரிமேடு விவேகானந்த நகா் அருகே தைலமரக் காடு உள்ளது. இந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தீப்பற்றியது.
தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்தனா். தீயணைப்பு வாகனம் செல்ல வழியில்லாததால், தீயணைப்பு வீரா்கள் உள்ளே நுழைந்து, மர இலை தழைகளைக் கொண்டு, சுற்றிலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனா்.
அடா் வனப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த முறையின்படி தீ கட்டுப்படுத்தப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டது.
தொடர்புடையது

புதுகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுகை ஆட்சியா் அலுவலகத்துக்கு 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

