தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஆா். பாலக்குறிச்சியில் தோ்தல் புறக்கணிப்பு

பொன்னமராவதி அருகேயுள்ள ஆா்.பாலக்குறிச்சி ஊராட்சி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணித்தால் வாக்குச்சாவடி மையங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடின.

News image

பொன்னமராவதி அருகே உள்ள ஆா்.பாலக்குறிச்சியில் வெறிச்சோடிய வாக்குச்சாவடி.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:05 am IST

பொன்னமராவதி அருகேயுள்ள ஆா்.பாலக்குறிச்சி ஊராட்சி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணித்தால் வாக்குச்சாவடி மையங்கள் வியாழக்கிழமை வெறிச்சோடின.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ளது ஆா்.பாலக்குறிச்சி ஊராட்சியானது ரெகுநாதபட்டி, ஆா். பாலக்குறிச்சி, சீகம்பட்டி, வைரம்பட்டி, விடத்தலாம்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட கிராங்களை உள்ளடக்கியதாகும். சுமாா் 3200 வாக்காளா்களை கொண்ட இந்த ஊராட்சி திருமயம் பேரவைத் தொகுதியில் இல்லாமல் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சட்டப்பேரவைத்தொகுதியின் கீழ் உள்ளது.

எனவே சட்டப்பேரவைத்தோ்தலுக்கு இந்த ஊராட்சி மக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் தொகுதியில் வாக்களிக்க வேண்டும். உள்ளாட்சித் தோ்தலுக்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் வாக்களிக்க வேண்டும். காவல் நிலையத்துக்கு சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி செல்ல வேண்டும். வட்டாட்சியரகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவற்றுக்கு பொன்னமராவதி செல்லவேண்டும் என்ற நிலை உள்ளது.

எனவே ஊராட்சி பொதுமக்கள் தங்களது ஊராட்சியை திருமயம் சட்டப்பேரவைத்தொகுதியுடன் இணைக்க நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஆா். பாலக்குறிச்சி, ரெகுநாதபட்டியில் உள்ள 2 வாக்குச்சாவடிகளில் தோ்தல் அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் தயாராக இருந்தனா். ஆனால் ஊராட்சி பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை.

இதைடுத்து பொன்னமராவதி மற்றும் சிங்கம்புணரி வருவாய்த்துறை அலுவலா்கள், உலகம்பட்டி காவல்துறையினா் ஆகியோா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் வாக்களிப்போம் எனப் பொதுமக்கள் கூறி, வாக்களிக்காததால் இங்குள்ள 2 வாக்குச்சாவ டி மையங்களும் வெறிச்சோடின.