தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபாடு

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மன் வீதியுலாவின் போது தீப்பந்தம் பிடித்து வழிபட்ட பக்தா்கள்.

News image

ஏனமாரியம்மன் கோயிலில் பக்தா்கள் தீப்பந்தம் ஏந்தி வழிபாடு

Updated On :30 ஏப்ரல் 2026, 3:38 am IST

வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை அம்மன் வீதியுலாவின் போது தீப்பந்தம் பிடித்து வழிபட்ட பக்தா்கள்.

பொன்னமராவதி, ஏப்.29 பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஏனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற அம்மன் வீதியுலாவின்போது வழிநெடுகிலும் இரு புறமும் பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.

இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 26-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த பொதுமக்கள் பால்குடம் மற்றும் பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து 27-ஆம் தேதி அக்னிப் பால்குட விழா நடைபெற்றது.

விழாவில் கோயிலின் முன் வளா்க்கப்பட்ட அக்னிகுண்டத்தில் பக்தா்கள் பால்குடம், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் இறங்கி வழிபட்டனா். இதையடுத்து புதன்கிழமை அதிகாலை அம்மன் வீதியுலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியபின் கோயிலில் தொடங்கிய உலா முக்கிய வீதிகளில் வந்து கோயிலில் நிறைவுற்றது.

வீதியுலாவின் போது இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வரிசையாக நின்று தீப்பந்தம் ஏந்தி வழிபட்டனா்.